Monday, November 3, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 8

யாழ்ப்பாண மாவட்டம் மாத்திரம் வடக்கு மாகாணம் அல்ல!

தனியே யாழ்ப்பாண மாவட்டம் மாத்திரம் வடக்கு மாகாணம் அல்ல. ஆளணிகள் முழுவதையும் யாழ்ப்பாணத்தில் வைத்திருக்க முடியாது. ஏனைய 4 மாவட்டங்களுக்கும் யாழ் மாவட்டத்திலிருந்தே ஆளணிகளைப் பங்கீடு செய்யவேண்டியுள்ளது. அந்தப் பங்கீட்டை உரியவாறு முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை மாலை (22.10.2025) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் ஒரு மாத காலத்தினுள் தயார் செய்யப்பட வேண்டும். திட்டங்கள் தயாரிக்கப்படும்போது திணைக்களத் தலைவர்கள் அவற்றை நேரடியாகப் பார்வையிட்டு, அதன் தேவைப்பாடுகளை உரியவாறு மதிப்பீடு செய்யவேண்டும். திட்டங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் மாற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.

வாழ்வாதார உதவிக்கான திட்டங்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்தாலும் அவை அதன் நோக்கத்தை முழுமையாக எட்டவில்லை. எனவே அவ்வாறான திட்டங்கள் தயாரிக்கப்படும்போது கூடுதல் அவதானம் தேவை. குறிப்பாக மத்திய அரசாங்கத்தாலும் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் மாவட்டச் செயலர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதிக்கு மேலதிகமாக தூய்மை இலங்கை செயற்றிட்டம் உள்ளிட்ட பல்வேறு செயற்றிட்டங்கள் ஊடாக மேலதிக நிதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, அதற்குரிய திட்டங்களையும் திணைக்களத் தலைவர்கள் தயாரிக்கவேண்டும்.

மாவட்டங்கள், பிரதேசங்களுக்கு என்று நிதிகளைப் பங்கீடு செய்யாமல் எந்தப் பிரதேசங்களுக்கு தேவைகள் அதிகமோ அங்கு கூடியளவு நிதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும். அதற்கு ஏற்றவாறே திட்டங்களும் தயாரிக்கப்பட வேண்டும்.

கடல்கடந்த தீவுகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு ஆபத்துக் கொடுப்பனவை, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார் ஆளுநர்.

2025ஆம் ஆண்டு திட்டங்களை முன்னெடுக்கும்போது எதிர்கொண்ட சவால்கள் தொடர்பில் குறிப்பாக சில திட்டங்களுக்கான கேள்விகோரல்களை வெளியிட்டபோது ஒப்பந்தகாரர்கள் யாரும் அதற்கு விண்ணப்பிக்காமை தொடர்பாகவும் திணைக்களத் தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அதனை அடுத்த ஆண்டு எவ்வாறு சரி செய்வது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், திணைக்களத் தலைவர்கள் அதற்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் சிறப்பாகச் செயற்படும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான கௌரவிப்புக்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு திணைக்களத்தில் பணியாற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் தகுதியில்லாத திணைக்களத் தலைவர்கள் அல்லது பணியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான இடமாற்றங்கள் அல்லது நடவடிக்கைகள் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்தாலும் உடனடியாக வந்து அவற்றைப் பார்வையிடுவதில்லை என மக்களால் முறைப்பாடு முன்வைக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அதிகாரிகளின் இத்தகைய பின்னடிப்பு நடவடிக்கைகள் மீது மக்களால் சந்தேகம் எழுப்பப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆளணி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்போது தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு சேவைப் பிரமாண குறிப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சுச் செயலாளர்களை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். அத்துடன் ஒவ்வொரு பணியாளரதும் தனிப்பட்ட கோவைகள் உரிய காலத்துக்கு காலம் இற்றைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், பணியாளர் ஒருவர் ஓய்வுபெற்று ஒரு மாத காலத்தினுள் அவருக்கான ஓய்வூதியம் கிடைக்கப்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதேவேளை, கடந்த காலங்களில் பிழையான ஒன்றைச் செய்து வந்தால், அந்தப் பிழையைத் தொடர அனுமதிக்குமாறே சில தொழிற்சங்கங்கள் கோருகின்றன எனக் குறிப்பிட்ட ஆளுநர், அதனைத் திருத்த முற்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என எச்சரிக்கின்றனர். மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது தொடர்பில் அவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால், இதில் மாற்றத்தை ஏற்படுத்த அதிகாரிகள் இறுக்கமான நடவடிக்கை எடுத்தேயாகவேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.

இதன் பின்னர் அமைச்சுச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களால் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

வடக்கில் தொடரும் ஆசிரியர் இடமாற்ற விவகாரம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஊடக சந்திப்பு இன்று 22.10.2025 இடம்பெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் இன்னாசிமுத்து சத்தியசீலன் தலைமையில் குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

2026ம் ஆண்டு ஆசிரியர் இடமாற்றமானது, சேவையின் தேவைகருதிய என்ற போர்வையில் வடமாகாண கல்வியமைச்சினால் முறைகேடாக, நீதிக்கு புறம்பான இடமாற்றம் இடம்பெற்றிருக்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 82 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வந்துள்ளது.

இந்த இடமாற்றத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. ஆசிரியர்களின் நலன்களை கருதாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலைமையை கருதாமல் போரினால் கல்வியை இழந்து பின்தங்கியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வியை மேலும் பாதிக்கின்ற வகையில் இடம்பெற்றிருக்கின்றது என ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளை கண்டித்துள்ளது.

82 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட 60 பேர் வரை 2009 யுத்த காலத்தில் பதுங்கு குழிகளில் யுத்த எறிகணைகளுக்கு மத்தியில் கடமையாற்றியவர்கள், கடந்த கால சேவைகளையும் ஆராயாமல் அவர்ளின் இடமாற்றமானது அடிப்படை மனித உரிமை மீறப்படுகின்ற விடயம் என சுட்டிக்காட்டியுள்ளது.

போர் முடிய உயர் ல்வியை கற்று ஆசியர் தொழிலுக்கு வந்தவர்களுக்கு கூட இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. புவிசார் நிலமைகளை கூட ஆராயாமல் ஒவ்வொரு பாடசாலைகளுக்குமிடையில் பல கிலோ மீற்றர் தூரம் கொண்ட கிராஞ்சி, வேரவில் போன்ற போக்குவரத்து வசதியில்லாது பல வருடங்கள் கடமையாற்றியவர்கள் இவர்களையும் இடம்மாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

நாங்கள் எங்கும் பணியாற்றக்கூடியவர்கள் அதன் உறுதிப்பாட்டில் நாங்கள் உள்ளோம். ஆசிரியர் பற்றாக்குரை மாவட்டத்தில் நிலவுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் வெற்றிடங்களை நிரப்பிக்கொண்டு ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு இடம்மாற்றத்தை வழங்க வேண்டும்.

தற்போது வெளியிட்டுள்ள ஆசிரிய இடம்மாற்றத்தை இரத்து செய்ய வலியுறுத்தி எதிர்வரும் 24ம் திகதி கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப்பணிமனை முன்பாக பிற்பகல் 2.00மணிக்கு இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து ஆசிரியர்களும் பொது அமைப்புக்களும் பெற்றோர்களும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுத்திருந்தார் செயலாளர் இன்னாசிமுத்து சத்தியசீலன்.

நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது!

நாட்டில் அரசியல்வாதிகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

வெலிகம பிரதேச சபைத்தவிசாளரின் கொலைக்குற்றவாளிகள் உடன் கைது செய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

வெலிகம பிரதேச சபைத்தவிசாளரின் கொலைக்குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெலிகமவில் இன்று (22) காலை இடம்பெற்ற வெலிகம பிரதேச சபைத் தவிசாளருடைய அகோரமான கொலைச் சம்பவம் எல்லோரையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது.

இக் கொலைச்சம்பவம் சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் சட்ட, ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் இது சம்பந்தமான விளக்கத்தை பாராளுமன்றத்தில் விடுக்க வேண்டும்.

இன்று அரசியல்வாதிகளுடைய பாதுகாப்பு மாத்திரமல்ல, பொதுமக்களுடைய பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கின்றது. திட்டமிட்டு பட்டப்பகலில் ஒரு காரியாலயத்திற்குள் புகுந்து ஒரு உள்ளூராட்சி சபைத் தவிசாளரைக் கொலை செய்வது சாதாரணமான விடயமல்ல.

இந்த உள்ளூராட்சித் தவிசாளரை நியமிக்கின்ற தினத்தில் அவருக்குச் சார்பாக வாக்களிக்கவிருந்தவர்களை கடத்திச்சென்று தடுத்து வைத்திருந்த சம்பவம் அரசாங்கத்தின் மேல் சந்தேகமெழுந்திருந்தது.

இப்பின்னணியில் இவ்வாறான கொலை நடைபெற்றிருப்பது என்பது அரசியல் ரீதியாக இதற்கு சம்பந்தமிருக்கிறதா? ஏற்கனவே இதை வேறுபக்கங்களில் திசை திருப்புவதற்காக கொலையுண்டவரை அவமானப்படுத்தும் அடிப்படையில் சில காரணங்களைச் சொல்ல சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அதற்குப்பின்னால் அரச தரப்பினரும் இருக்கிறார்களா? என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது.

இச்சூழ்நிலையில் இது சம்பந்தமாக அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நீதிமன்றத்திற்குள்ளே கொலைச்சம்பவத்தை திட்டமிட்டார் என்ற அடிப்படையில் நாட்டிற்கு வெளியில் சென்று பெண்ணொருவரைக் கைது செய்ய முடியுமாயின், இன்று நாட்டுக்குள்ளே கொலையை நடாத்திய கொலைதாரிகளை மிக அவசரமாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென மிக அழுத்தம் திருத்தமாக வேண்டிக்கொள்கின்றோம் எனத்தெரிவித்தார்.

அதிபருக்கும் அவரது மனைவிக்கும் கொலை மிரட்டல்!

0

ஜூட் சமந்த

பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியராக கடமை புரியும் அவரது மனைவிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து சிலாபம் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சிலாபம் கல்வி வலயத்தில் பணிபுரியும் அதிபர் மற்றும் ஆசிரியராக கடமை புரியும் அவரது மனைவிக்கு இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தலுக்கு உள்ளான அதிபர் கடந்த 8 ஆம் தேதி சிலாபம் அருகே உள்ள ஒரு பாடசாலையில் கடமைகளை பொறுப்பேற்றார். அதிபர் பதவியேற்றதற்கு எதிராக அப்பகுதி உள்ள சிலர் பல நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

இருப்பினும், அதிபர் தனது பணியிடத்தில் பதவியேற்று தனது பணிகளைத் தொடர்ந்தார்.

இதனை அடுத்து சில நாட்களுக்கு முன்பு அதிபரின் மொபைல் போனுக்கு அழைத்த ஒருவர், அவர் தற்போது பணிபுரியும் பள்ளியை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

அதே நாளில், பள்ளி ஆசிரியரான அதிபரின் மனைவியின் தனிப்பட்ட மொபைல் போனுக்கும் இவ்வாறானதொரு அழைப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிபர் மற்றும் அவரது மனைவி சிலாபம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

அதிபருக்கும், பள்ளி ஆசிரியையான அவரது மனைவிக்கும் ஒரே மொபைல் எண்ணில் இருந்து அழைப்புகள் வந்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, தொடர்புடைய மொபைல் போன் அழைப்புகளை மேற்கொண்ட நபரை அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சிலாபம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட 1250 மதன மோதக (லேகியம்) பக்கட்டுகள்!

0

ஜூட் சமந்த

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் குழுக்களை குறிவைத்து மதன மோதக (லேகியம்) விற்பனை செய்த ஒருவரை ஏறாவூர் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஏறாவூர் நகரில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்யும் ஒரு வணிக நிறுவனத்தின் உரிமையாளரை காவல்துறை அதிகாரிகள் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் வணிக இடத்திலிருந்து 1250 மதன மோதக பொட்டலங்கள் (லேகியம்) போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட அந்த (லேகியம்) பொட்டலங்கள் சுமார் 19 கிலோகிராம் எடை கொண்டவை என தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரிடம் மதன மோதகாவை விற்பனை செய்வதற்கான உரிமம் இல்லாத நிலையில், போதைப்பாவனை நோக்கில் சந்தேக நபர் பல காலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மதன மோதகாவை (லேகியம்) ரகசியமாக விற்பனை செய்து வந்ததாக சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட மதன மோதகா பக்கட்டுகளும் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளது.

ஏறாவூர் காவல்துறையின் பதில் OIC, தலைமை ஆய்வாளர் பிரசாத் லியனகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவால் இந்த சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் நீர்த்தேக்கங்களில் மேலும் திறக்கப்பட்ட வான்கதவுகள்!

0

ஜூட் சமந்த

தெதுரு ஓயா, ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் மேலும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

இன்று 22 ஆம் தேதி அதிகாலை 1.00 மணி நிலவரப்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகள் தலா 04 அடி திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட வான்கதவுகளிலிருந்து வினாடிக்கு 5038 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை கூறுகிறது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 04 வான்கதவுகள் தலா 04 அடி திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட வான்கதவுகளிலிருந்து 3472 கன அடி நீர் வெளியேற்றப்படும்.

அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் தலா 2 அடி திறக்கப்பட்டுள்ளன. இந்த வான்கதவுகளிலிருந்து வினாடிக்கு 1088 கன அடி நீர் வெளியேற்றப்படும்.

ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீர் கலா ஓயாவிற்குள் பாயும் என்பதால், தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதே நேரத்தில், தப்போவ நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 1.5 அடி திறக்கப்பட்டுள்ளன.

திறக்கப்பட்ட வாயில்களிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மீ ஓயாவிற்கு வினாடிக்கு 1890 கன அடி வீதம் செல்வதால், தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதே நேரத்தில், புத்தளம் மாவட்டத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் நிலவும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது. தங்கொட்டுவ, மஹாவெவ, மாரவில மற்றும் நாத்தாண்டிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்த நிலைமை பதிவாகியுள்ளது.

1 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் புத்தளத்தில் இருவர் கைது!

0

ஜூட் சமந்த

மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 01 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, வனாத்தவில்லுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வனாத்தவில்லுவ – சேரக்குளிய பகுதியில் நேற்று 21 ஆம் தேதி மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கல்பிட்டி, வென்டேசி வட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய தந்தை மற்றும் 18 வயதுடைய மகனே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

300 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார், மற்ற சந்தேக நபர் 700 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார். இந்த இரண்டு சந்தேக நபர்களும் மன்னார் பகுதியில் இருந்து ஐஸ் போதைப்பொருளை கொண்டு வந்து விநியோகிக்கும் இரண்டு நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சோதனையை நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு சந்தேக நபர்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.

கொழும்பின் பல பகுதிகளில் நாளை 10 மணி நேர நீர்த்தடை!

0

கொழும்பு 01 முதல் 15 வரை மற்றும் பல முக்கிய நகரங்களில் நாளை (23) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

நாளை காலை 10.00 மணி முதல் அன்றைய தினம் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. 

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை பெறும் பிரதான நீர் பம்பிக்கு வழக்கப்படும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடான நீர் விநியோகம் இவ்வாறு துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையான பகுதிகளுக்கும், பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொடை, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

திடீரென குறைந்த தங்கத்தின் விலை!

0

இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. 

செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22)  322,000 ரூபாயாக குறைந்துள்ளது. 

அதேநேரம் நேற்றைய தினம் (21) 370,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22) 350,000 ரூபாவாக குறைந்துள்ளது. 

கடந்த சில நாட்களாக 410,000 ரூபாய் வரை அதிகரித்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை!

0

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். 

அவர் இன்று (22) காலை பிரதேச சபையில் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பின்னர், படுகாயமடைந்த அவரை பிரதேச சபை அதிகாரிகள் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். 

துப்பாக்கிதாரிகள், பிரதேச சபை தலைவரிடம் கடிதம் ஒன்றில் கையொப்பம் பெறுவது போன்று பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.