Saturday, June 7, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 8

உருவாகும் உப்பு மாபியா – அரசு மீது ஹக்கீம் சாடல்!

0

புத்தளம் உப்பள பிரச்சினைக்கான தீர்வே உப்பு பிரச்சினக்கான தீர்வாக அமையும்.

புத்தளத்தின் உப்பள பிரச்சினைக்கு தீர்வு தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புத்தள உப்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே சபை ஒத்திவைப்பு நேர பிரேரணையில் குறிப்பிட்ட நிலையில் இன்று மேற்படி கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

புத்தளம் பிரதேசத்தில் பூர்வீகக்காணிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த உப்பள சங்கத்தின் உற்பத்தி தடைசெய்து அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு காணிகளை அரசு அபகரித்துக்கொண்டது.

அது மட்டுமல்ல, நீண்டகாலமாக அவர்கள் உப்பு உற்பத்தி செய்து வந்த காணிகளை வேறு நபர்களுக்கு வழங்கும் நோக்கில் கடந்த அரசாங்க காலத்தில் சில விடயங்கள் நடந்தெறின.

அது இன ரீதியான பாகுபாடாகவும் அப்பிரதேசங்களில் பார்க்கப்படும் அதே வேளை, இன ரீதியான விடயங்களாக இவ்விவகாரங்கள் நடக்கவோ அணுகப்படவோ கூடாது எனப்பேசுகின்ற அரசு புத்தளம் பிரதேச செயலகத்தினூடாக அரசாங்கம் கையகப்படுத்தி வைத்திருக்கின்ற அக்காணிகளையும் அனுமதிப்பத்திரத்தையும் உப்பள சங்க உறுப்பினர்களுக்கு வழங்குவதன் மூலம் அக்காணிகள் மீளவும் கையளிக்க வேண்டும்.

அதனை உப்பு பிரச்சினைக்கான தீர்வுகளில் ஓரங்கமாகப் பார்க்க வேண்டும்.

அது மட்டுமல்லமால், புத்தளத்தில் இருக்கின்ற களப்புகளில் வெவ்வேறு நீர் நிலைகளின் நீர் சேர்வதானால் உவர்த்தன்மை வெகுவாகக் குறைந்து வருகின்றது.

1-3% இருந்த உவர்த்தன்மை இன்று 0.5% இருந்து 1% வரையுள்ளது. எனவே தான் உப்பு உற்பத்தியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனை அங்கிருக்கின்ற உப்பள உரிமையாளர்களும் ஏற்கனவே அரசுக்கு அறிவித்துள்ளார்கள்.

ஆனால், புத்தளத்தில் அதற்கான அதிகாரமுள்ள எவருமில்லை. அரசாங்கத்தினூடாக எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படுவதில்லையென்ற பாரிய பிரச்சினையுள்ளது.

எனவே, இவற்றையெல்லாம் கவனத்திற்கொண்டு உப்பு பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்.

அதேநேரம், உப்பு வியாபாரத்தில் உப்பு மாபியாவொன்று உருவாகியிருக்கிறது. அந்த உப்பு மாபியாவுக்குப் பின்னால் அரசாங்கத்தின் அனுசரணை உள்ளதா என்பதையும் காலதாமதத்திற்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும்.

ஏன் காலம் தாழ்த்தி மும்பாயிலிருந்து உப்பு இறக்குமதி செய்கின்றார்கள்? 4 மில்லியன் மூடைகள் உப்பு தேவைப்படும் நிலையில் சுமார் 6 இலட்சம் மூடைகள் தான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள பாரிய ஊழலை விசாரிக்க வேண்டும்.

உப்புக்கம்பனியின் சொந்தக்காரர்கள் யார்? ஏன் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன என்பது தொடர்பில் அரசு கவனத்திற்கொள்ளல் வேண்டிய மிக முக்கியமாகும்.

அத்துடன், ஊழல் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்குறிப்பிட்டார்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி.

வைத்தியசாலையில் தற்கொலை!

0

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி கூர்மையான ஆயுதத்தால் தனக்கு தானே தீங்கு விளைவித்து தற்கொலை செய்து கொண்டார். 

கடந்த 18ஆம் திகதி மாத்தளையில் இருந்து வந்த 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான இவர், வைத்தியசாலையின் 18ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இவர் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

பொலன்னறுவை வைத்தியசாலையின் 23ஆவது வார்டில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இந்த நோயாளி, இன்று (22) பிற்பகல், தன்னிடம் வைத்திருந்த பழம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிறிய கத்தியால் தனது மார்பு பகுதியில் காயப்படுத்தி தற்கொலை செய்து கொண்டார். 

வைத்தியசாலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நோயின் காரணமாக ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறினார். 

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புத்தளத்தில் இடம்பெற்ற ஒன்லைன் பண மோசடி!

ஒன்லைன் பண மோசடி மூலம் சுமார் 5 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று புத்தளம் நாகவில்லு பகுதியில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

மிகவும் சூட்சுமமான முறையில் வங்கி கணக்கு திருடப்பட்டு, வங்கி கணக்கு உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இன்றைய தினமும் (22) ஒன்லைன் பண மோசடி செய்யும் கும்பல் ஒன்றிடமிருந்து பண மோசடி செய்வதற்காக புத்தளம் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு 071 583 6145 என்ற இலக்கத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதாகவும், மேலதிக தகவல்கள் பெற முயன்றபோது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைக்காலமாக ஒன்லைன் பண மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அரசு மற்றும் பொலிஸ் திணைக்களங்களினால் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தும், இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவது அதிரித்தவண்ணமே உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் அண்மைக்காலமாக வாட்சப் கணக்குகள் முடக்கப்படும் சம்பவங்களும் அதிரித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிமுகமில்லாத எவரிடமிருந்தும் வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் வாட்சப் செய்திகளுக்கு உங்கள் வங்கிக் கணக்குகள் பற்றிய விபரங்களை வழங்குவதை தவிர்ப்பதன் மூலம் இவ்வாறான ஒன்லைன் பண மோசடிகளை முறியடிக்க முடியும் என்பதை மிகவும் ஆழமாக மனதில் பதித்துக்கொள்ளவும்.

வடக்கில் 6200 விவசாயிகளுக்கு 190 மில்லியன் வைப்பில்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக அரசாங்கத்தின் உரமானியமாக இதுவரை 6200 விவசாயிகளுக்கு 7600 ஏக்கர் நிலப்பரப்புக்காக 190 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுபோக செய்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு சிறுபோக செய்கையாக 10,800 ஹெக்டேயர் நிலப்பரப்பில் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் போதிய மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்று குளங்களில் போதுமான அளவு நீர் காணப்படுவதாகவும், 2025 சிறுபோக செய்கைக்காக உரமானியமாக இதுவரை 6200 விவசாயிகளுக்கு 7600 ஏக்கர் நிலப்பரப்புக்காக 190 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தெரிவித்தார்.

ஏனைய விவசாயிகளுக்கு அவர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு கமநல சேவை நிலையங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தகவல் அறியும் சட்டம் தொடர்பான விஷேட செயலமர்வு!

0

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு தொடர்பான விஷேட செயலமர்வு இன்று புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் பொது அதிகாரிகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில், புத்தளம் மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்), தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி ஆலோசகர் திருமதி புபுதிகா எஸ். பண்டார அவர்களினால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது, எவ்வாறு அணுகுவது மற்றும் எவ்வாறான விடயங்களுக்கு என்னென்ன அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்ககளிடமிருந்து விடயங்களை பெற்றுக்கொள்வது தொடர்பான மிக நீண்ட தெளிவு புத்தளம் மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர் அவர்களினால் வழங்கப்பட்டது.

குறித்த செயலமர்வில் மட்டுப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள், தொண்டு நிறுவன சிரேஷ்ட உறுப்பினர்கள், சிவில் அமைப்பினர்கள் மற்றும் அரச நிறுவன அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல் அறியும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை கிராமிய மட்டங்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், புத்தளம் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க கிராமங்களில் இவ்வாறான நிகழ்ச்சி திட்டங்களை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேக்கொள்ள உதவுமாறு ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி ஆலோசகர் திருமதி புபுதிகா எஸ். பண்டார அவர்களினால் அனுமதி வழங்கபட்டது.

குறித்த கிராமிய மட்ட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் தாம் வழங்குவதாக திருமதி புபுதிகா எஸ். பண்டார உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

OIC க்கு 27 வரை விளக்கமறியல்!

0

இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தார். 

கொழும்பில் இருந்து வருகைதந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

கைது செய்யப்பட்டவர் இன்றையதினம் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

இதேவேளை, பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு 27 ஆம் ஆம் திகதி வரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

குறித்த வழக்கு 27 ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை!

0

தற்சமயம் எமது நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. 180 வகையான மருந்துகளுக்கு இவ்வாறு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது. 

மருத்துவமனை கட்டமைப்பில் மேலும் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கும் பற்றாக்குறை நிலவி வருகின்றன. இவற்றில், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி ​​நிவாரணிகள், இன்சுலின், இதய நோய் மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கும் கடுமையான பற்றாக்குறை நிலவி வருகின்றன. 

இவ்வாறான பின்புலத்தில், இது குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் தீர்வுகள் முன்வைக்கப்படவும் இல்லை, பதில்கள் வழங்கப்படவுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) தெரிவித்தார். 

விசேட கூற்றொன்றை முன்வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

இவை பொதுமக்களால் எழுப்பப்படும் கேள்விகள் ஆகும். இன்றும் கூட, தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு பேசி வருகிறது. ஆனால் மருந்துப் பற்றாக்குறை தொடர்பிலோ அல்லது சுகாதாரத் துறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கோ எந்தப் பதிலும் இல்லை. ​​நாட்டு மக்களின் வாழும் உரிமையை பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கத்திற்கு எந்த ஆர்வமும் இல்லை. இலவச சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கும் இந்த அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாக இல்லை. 

LP 8.1 எனப்படும் கோவிட் மாதிரிகளின் துணை மாறுபாடு தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா மற்றும் ஹாங்காங்கில் பரவி வருகின்றன. இந்த துணை வகை மாறுபாடுகள் குறித்து நமது நாட்டில் எந்த வித பரிசோதனைகளும் நடைபெறுவதாக காண முடியவில்லை. இந்த துணை மாறுபாடு திரிபுகள் தொடர்பாக எமது நாட்டிலும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மருத்துவமனைகளில் இந்த அறிகுறிகளைக் காண்பிப்பவர்களுக்கு கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். 

அவ்வாறே சின்னம்மை பரவுவதாலும் கடுமையான பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதற்கு குறைந்த பட்சம் 6 வாரங்கள் தொடராக சிகிச்சையளிக்க வேண்டும். இந்த நோய் பரவுவதற்கான சாத்தியாம் அதிகரித்து காணப்படுகின்றன. எனவே, இதற்கும் தெளிவான திட்டமொன்று முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

அலுவலர்கள் 9 மணிக்குத்தான் வருகிறார்கள்!

பல திணைக்களங்களுக்கு அலுவலர்கள் காலை 9 மணிக்குத்தான் வருகின்றார்கள். காலை 8.30 மணிக்கு முன்னர் அலுவலகம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

திணைக்களத் தலைவர்கள், அலுவலர்களின் ஒழுக்கம் – கட்டுப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் எனவும், அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை காக்க வைக்காதீர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.

வடக்கு மாகாண ஆளுநருக்கும், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் இடையிலான மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (21.05.2025) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் அண்மையில் ஆளுநர்களுடனான சந்திப்பின்போது மாகாணங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை இந்த ஆண்டுக்குள் செலவு செய்யவேண்டும் என அறிவுறுத்தியதாகவும் அதற்கு அமைவாக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உரிய திட்டங்களுக்கு உரியவாறு செலவு செய்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.

திட்டங்களை திணைக்களத் தலைவர்கள் நேரடியாகப் பார்வையிட்டு தொடர் கண்காணிப்பை முன்னெடுப்பதன் ஊடாகவே விரைவாக செயற்படுத்தி முடிக்க முடியும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், பின்தங்கிய கிராமங்களிலிருந்து மக்களின் கோரிக்கைகளை உள்வாங்கியே திட்டங்களை அடையாளப்படுத்தி நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை உரியவாறு செலவு செய்வதன் ஊடாக அடுத்த ஆண்டு அதிகளவான நிதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதையும் ஆளுநர் குறிப்பிட்டார்.

மேலும், திணைக்களங்களுக்கு இடையிலான கடிதப் பரிமாற்றங்கள் மின்னஞ்சல் ஊடாக முன்னெடுக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்திய ஆளுநர், திணைக்களத் தலைவர்கள் இதனைப் பின்பற்றவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன் பின்னர் பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல் அவர்களால், ஒவ்வொரு அமைச்சுக்கள், அதன் கீழான திணைக்களங்களில் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக தெரியப்படுத்தப்பட்டன. அதில் ஒவ்வொரு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் முன்னெடுக்கும் திட்டங்களில் உள்ள இடர்கள் தொடர்பில் ஆராயப்பட்டு மாற்று ஒழுங்குகள் பரிந்துரைக்கப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் 5 அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதன் கீழான அனைத்துத் திணைக்களங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

நாட்டில் மீண்டும் பொருளாதார சுனாமியை ஏற்படும்!

0

உண்மை, பொய் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஐக்கிய இராச்சிய முதலீட்டாளரின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையொன்று இன்று முற்றிலுமாக மூடப்பட்டு 2000 பேர் வீதிக்கு வந்துள்ளனர்.

2028 முதல் கடனை அடைக்க தற்போது 5% பொருளாதார வளர்ச்சி விகிதம் எமக்கு தேவையாக காணப்படுகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் போது இந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைவது சாத்தியமில்லை. 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, ​​அதை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கு மிரட்டல் விடுத்தவர்களும் இருந்தனர். இத்தகைய சூழ்நிலையில், நாம் 5% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை கொண்டு வர வேண்டும். அவ்வாறு இல்லையெனில், 2028 முதல் நமது கடன்களை மீளச் செலுத்த முடியாமல் மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவோம். இது நடந்தால், நாடு பொருளாதார சுனாமிக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

பொருளாதாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் தனது கருத்துக்களை வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். 

next என்ற தொழிற்சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. தொழிற்சாலை உரிமையாளரின் கூற்றுப்படி, நாட்டில் பொருத்தமான பொருளாதார மற்றும் சமூக சூழல் இல்லை. இலங்கையில் தற்போதைய உற்பத்தி செலவுகள் நிலையானதாக இல்லாததால் இந்த தொழிற்சாலையை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள் காரணமாக எதிர்காலத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று பொருளாதாரம் வளர்வதற்குப் பதிலாக, பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக இருக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

உடனடியாக இந்த next தொழிற்சாலை உரிமையாளரைச் சந்தித்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடலை நடத்துங்கள். 200 ஆடை தொழிற்சாலைகள் திட்டத்திலிருந்து முன்ணுதாரணத்தை எடுத்துக் கொள்ளுமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். கடினமான காலங்களில் அரசாங்கம் தலையிட வேண்டும். உண்மை பொய் பற்றிய விவாதம் நடைபெறும் இந்த நேரத்தில், இது குறித்தும் ஆராயுமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். உழைக்கும் மக்களின் நாயகர்களாகத் தன்னைக் காட்டிக் கொண்ட இந்த அரசாங்கத்தின் பொறுப்பு, நாட்டின் உழைக்கும் மக்களைப் பாதுகாப்பதாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். 

மின்சாரக் கட்டணத்தை ரூ. 9000-லிருந்து ரூ. 6000-ஆகக் குறைப்பதாகக் கூறிய அரசாங்கம், மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்பதாகவும் வாக்குறுதியளித்தது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் இதனைத் தெரிவித்தார். மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்பதாகக் கூறிய அரசாங்கம், இப்போது மின்சாரக் கட்டணத்தை 18% அதிகரிக்கப் போகிறது. இந்த அரசாங்கம் தற்போதுள்ள IMF இணக்கப்பாட்டை இரத்துச் செய்வதாக உறுதியளித்தது. ஆனால் இப்போது காணப்படும் அதே IMF இணக்கப்பாட்டின் கீழ் மின்சார கட்டணங்களை அதிகரிக்கத் தயாராகி வருகிறது. மின்சாரக் கட்டணத்தை இப்போது அதிகரிக்காவிட்டால், IMF இன் அடுத்த தவணை கிடைக்காது போகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

6.1 மில்லியன் மின்சார நுகர்வோர்கள் காணப்படுகின்றனர். 30 அலகுகள் வரை 15 இலட்சம், 60 அலகுகள் வரை 16 இலட்சம், மற்றும் 90 அலகுகளை பாவிப்போர்கள் 16 இலட்சம் என்றவிளவில் காணப்படுகின்றனர். சாதாரண மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும். பொய் சொல்லாமல் உண்மையைப் பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

படை வீரர்களையும், படை வீரர்களை நினைவு கூர்வது குறித்தும் பேச்சுக்கள் நடந்து வருகின்றன. பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டை விடுவித்த படை வீரர்களையும் பாதுகாப்புப் படையினரையும் போர்வீரர்கள் என்று அழைப்பது வெட்கக்கேடான விடயமல்ல. படை வீரர்களை நினைவு கூறும் நாள் என்பது தங்கள் இரத்தத்தையும் சதையையும் தானம் செய்த படை வீரர்களின் குடும்பங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகும். அவர்களின் நலனுக்காக வலுவானதொரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். கடந்த காலங்களில், சிவில் பாதுகாப்புத் துறையைச் சேர்த்த 34,000 பேருக்கு அற்ப ஊதியத்தை வழங்கி வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அரசாங்கமும் இத்தகைய கொள்கையையே பின்பற்றி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த தலைவர்கள் பாதாள உலகத்துடன் தொடர்பு பட்டுள்ளனர் என்று நேற்றைய தினம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டினார். பாதாள உலகத்துடன் தொடர்புடைய ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த தலைவர்கள் யார் என்பதை நிரூபிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். வாய் இருப்பதற்காக பொய் சொல்லாமல் மக்களை ஏமாற்றாமல் உண்மையைச் சொல்லுங்கள். ஐக்கிய மக்கள் சக்திக்கு பாதாள உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

நாட்டில் கொலைக் கலாச்சாரத்தைத் தடுக்க அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் பிரச்சினை காணப்படுகின்றது. மக்களின் வாழ்க்கையை அழிக்கும் இந்த நேரத்தில், இந்தக் கொலைகாரக் கும்பல்கள் மீது தெளிவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார். 

இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. தக்காளி 1114/- ஆலும் மற்றும் கரட் 700/- என்றவாறும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனுடன் ஒப்பிடும்போது ஒரு குடும்பத்தின் வருமானமானது அதிகரிக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் ஒரு இடத்தில் சிக்கியுள்ளது. வருமானம் குறைந்து, சமத்துவமின்மை அதிகரித்து, வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என்பன அதிகரித்துள்ளன. இந்த உண்மையின் மீது அரசாங்கம் தனது கவனத்தை திருப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். 

நமது நாட்டில் தனிநபர் உப்பு நுகர்வு 9.2 கிராம் ஆகும். இதனை உலக சுகாதார ஸ்தாபனம் 5 கிராம் என்று கூறுகிறது. நமது நாட்டின் வருடாந்த உப்புத் தேவை 180,000 மெட்ரிக் டொன்கள் ஆக காணப்படுகின்றன. ஹம்பாந்தோட்டை, பலடுபான பூந்தல, மன்னார், ஆனையிறவு போன்ற உப்பளங்களில் 140,000-150,000 வரை உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. எமது நாட்டின் உப்புத் தேவையை இது பூர்த்தி செய்கிறதா என்பதில் பிரச்சினை காணப்படுகிறது. இந்த அரசாங்கத்தால் கொஞ்சம் உப்பைக் கூட வழங்க முடியாது போயுள்ளது. அவ்வப்போது ஏற்படக்கூடிய பற்றாக்குறையைக் கூட இந்த அரசாங்கத்தால் கணிப்பிட முடியாது போயுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

இந்த அரசாங்கத்திற்கு வேடிக்கையான கதைகளைச் சொல்ல மட்டுமே தெரியும். அரசாங்கம் அனுப்பிய கடிதத்தின் காரணமாகவே ஜனாதிபதி டிரம்ப் 90 நாட்களுக்கு வரி அறவீட்டை இடை நிறுத்தி வைத்ததாக நகைச்சுவைகளை சொல்லி வருகின்றனர். அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கூட்டு அறிக்கை வெளியிடுவதாக ஆரம்பத்தில் தெரிவித்தனர். என்றாலும் அரசாங்கம் ஒருதலைப்பட்சமான அறிக்கையையே இறுதியில் வெளியிட்டது. இவை வெறுமனே கேளிக்கையான கதைகள் ஆகும். தரவுகளுடன் பேசும்போது அரசாங்கத்தின் பொய்கள் அம்பலத்துக்கு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் 10 மணி நேர நீர் வெட்டு!

0

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (22) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

இதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையான 10 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

குறித்த காலப்பகுதியில் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

இதனால் பாவனையாளர்கள் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.