என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல்.
நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான்.
இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன்.
இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை. அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க இன்று (28) தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரமேஷ் பத்திரண ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் நீண்ட நேரம் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், காலி, ஹினிதும மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளிலிருந்து இன்றும் ஆதரவாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க பேருந்துகளில் தங்காலைக்கு சென்றிருந்தனர்.
குழந்தைகள் அதிகநேரம் செல்போனைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
குழந்தைகள் அதிகநேரம் செல்போனைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குழந்தைகள் அதிகநேரம் குனிந்து, செல்போனைப் பார்ப்பதால், அவர்களுக்கு கழுத்து மற்றும் முதுகெலும்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கழுத்து, தோள்பட்டையில் வலியோ அல்லது முதுகெலும்பு அடுக்கில் மாற்றம் ஏற்பட்டு, குழந்தைகள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவோ அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாளடைவிலான பழக்கம், குழந்தைகளின் தோற்றத்தை மாற்றக் கூடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குழந்தைகள் முன்பைப் போன்று, வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடாததே இதற்கு முக்கியக் காரணம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். செல்போனில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு யோகா, உடற்பயிற்சி உள்ளிட்டவை அளிப்பது, இதற்குத் தீர்வு என்றாலும், எவ்வாறு அமர்வது என கற்றுக் கொடுப்பது, சரியான தலையணை உபயோகிப்பதும் நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தவெக தலைவர் விஜய் நேற்று மாலை கரூரில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவரைக் காண்பதற்காக தொண்டர்கள் மற்றும் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்டநெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும் 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாயும், சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் நிவாரணம் அறிவித்தார்.
கரூரில் மக்கள் கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் பிரதமர் மோடி.
அந்தபதிவில், “தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில் தற்போது மத்திய அரசு சார்பில் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28) உயிரிழந்தார்.
இதன்படி குறித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
நா உயன ஆரண்ய சேனாசனத்தின் மடங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கேபிள் கார் உடைந்து வீழ்ந்த விபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏழு பிக்குகள் முன்னதாக உயிரிழந்தனர்.
ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டு பிக்குகளும் அவர்களில் அடங்குகின்றனர்.
மேலும், 5 பிக்குகள் காயங்களுடன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த உள்நாட்டு பிக்குகளின் இறுதி கிரியையகள் நேற்று இடம்பெற்றது.
ஜெர்மனியின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் BOSCH-ல் இருந்து 13,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து தாறுமாறாக முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் பாதிப்புகள் நிலவிக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக இந்தியாவை குறிவைத்து அதிகளவு நடவடடிக்கை எடுத்து வருகிறார். விசா விவகாரம் தொடங்கி வரி உயர்வு வரை உள்ள நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கிறார்.
இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் வரி உயர்வு காரணமாக செலவு அதிகரித்துள்ளதால் வாகன உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. உலகின் முன்னணி வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று போஸ். ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். இதற்கிடையே, உலகளாவிய வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தமான சூழலால் வாகன உற்பத்தி வெகுவாக சரிந்தது.
இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டெஸ்லா, பி.ஒய்.டி. போன்றவை ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இந்நிலையில், போஸ் நிறுவனமும் தற்போது ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன்படி, உலகம் முழுவதிலும் உள்ள அதன் கிளையில் இருந்து சுமார் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய போஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பும் ஒரு காரணம் என போஸ் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.
நைஜீரியாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நைஜீரியா நாட்டின் ஜம்ஃபாரா மாகாணத்தில், சட்டவிரோத தங்கச் சுரங்கத் தொழில் பரவலாக நடைபெற்று வருகிறது.
இங்குள்ள தங்க வயல்களை ஆயுதம் ஏந்திய கும்பல்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றி அடிக்கடி வன்முறைச் சம்பவங்களும், கொடிய விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த சட்டவிரோத சுரங்கங்களில், உள்ளூர் மக்கள் எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அபாயகரமான முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜம்ஃபாரா மாகாணத்தில் உள்ள கடவுரி சுரங்கப் பகுதியில், நேற்று தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. சம்பவத்தின் போது, ஏராளமான உள்ளூர் சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் வேலை செய்துகொண்டிருந்தனர். இந்த கோர விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என உயிர் தப்பியவர்களும், அப்பகுதி மக்களும் கூறுகின்றனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 15 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிலரும் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து ஜம்ஃபாரா காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கூகுளில் இடியட் என ஆங்கிலத்தில் தேடினால் டிரம்பின் புகைப்படம் வந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து கூகிள் சிஇஓ சுந்தர்பிச்சை விளக்கமளித்திருப்பது சிரிப்பலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கூகுளில் ஆங்கிலத்தில் இடியட் என்று தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புகைப்படம் கிடைப்பதாக எழுந்த சர்ச்சையின் அடிப்படையில் ஹவுஸ் நீதித்துறை குழு விசாரணையின் போது சுந்தர் பிச்சை அளித்துள்ள பதில் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. கூகிள் படத் தேடலில் “முட்டாள்” என்ற வார்த்தைக்கான சிறந்த முடிவுகளில் டிரம்ப்பின் படம் இடம்பெற்றதைத் தொடர்ந்து வாஷிங்டன்னில் இது பேசுபொருளானது.
இது தொடர்பாக ஹவுஸ் விசாரணைக்குழு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் விளக்கம் கேட்கப்பட்டது. “அது எப்படி நடக்கும்? அப்படி நிகழும் வகையில் தேடல் எவ்வாறு செயல்படுகிறது?” என்று ஜனநாயகக் கட்சி பிரதிநிதி ஜோ லோஃப்கிரென் சுந்தர் பிச்சையிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சுந்தர் பிச்சை கூகிள் முடிவுகளை கைமுறையாகத் தேர்ந்தெடுக்கவோ அல்லது திருத்தவோ இல்லை அவை , வழிமுறை பயனர் நடத்தை மற்றும் பொருத்தத்தின் அடிப்படையில் தகவல்களை செயலாக்குகிறது.
“நாங்கள் முக்கிய வார்த்தையை எடுத்து எங்கள் குறியீட்டில் உள்ள பில்லியன் கணக்கான பக்கங்களுடன் ஒப்பிடுகிறோம். பின்னர் பொருத்தம், புத்துணர்ச்சி, புகழ், மற்றவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் போன்றவற்றின் அடிப்படையில் அவற்றை தரவரிசைப்படுத்துகிறோம்,” என்று சுந்தர் பிச்சை பதிலளித்தார்.
லோஃப்கிரென் நகைச்சுவையாகத் தொடர்ந்து, “அப்படியானால், பயனர்களுக்கு நாங்கள் என்ன காட்டப் போகிறோம் என்பதைக் கண்டுபிடிப்பது திரைக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் ஒரு சிறிய மனிதர் அல்லவா?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சுந்தர் பிச்சை, “கடந்த ஆண்டு 3 டிரில்லியனுக்கும் அதிகமான தேடல்களைக் கண்டோம், எனவே எந்தவொரு தேடல் முடிவிலும் நாங்கள் கைமுறையாக தலையிடவில்லை.” கூகிள் பழமைவாதிகளுக்கு எதிராக ஒரு சார்புடையது என்று டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக் கூறியதை அடுத்து இந்த வீடியோ வைரலாக்கபட்டு வருகிறது.
சரி, கூகிள் எவ்வாறு நாம் தேடும் விஷயங்களுக்குத் தேவையான வெளியீட்டை உருவாக்குகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? தளத்தின் பின்னால் அமர்ந்திருக்கும் ஒருவர் நமது அனைத்து வினவல்களையும் கண்காணிக்கிறாரா, அல்லது அது வெறும் நவீன மென்பொருள் தொழில்நுட்பமா?
தேடல் முடிவுகளின் அரசியலில் மூழ்குவதற்கு முன், கூகிள் திரைக்குப் பின்னால் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். கூகிளின் தேடுபொறி பில்லியன் கணக்கான வலைத்தளங்களை ஸ்கேன் செய்து தகவல்களை ஒரு பெரிய குறியீட்டில் சேமிக்க வலை கிராலர்கள் எனப்படும் மென்பொருளைப் பயன்படுத்துகிறது. நீங்கள் ஒரு கேள்வியை உள்ளிடும்போது, நூற்றுக்கணக்கான காரணிகளின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான முடிவுகளைக் காண்பிக்க கூகிளின் தரவரிசை வழிமுறை இந்த குறியீட்டை ஆராய்ந்து பார்த்து நமக்கு அதில் சிறந்தவற்றை விடையாகக் கொடுக்கிறது. இந்த முறை கூகுள் பாம்பிங் என்று கூறப்படுகிறது.
சரி கூகுள் பாம்பிங் என்றால் என்ன என்று பார்க்கும்போது அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் ஒரு குறிப்பிட்ட சொற்றொடரை ஒரு குறிப்பிட்ட பக்கம் அல்லது படத்துடன் வேண்டுமென்றே இணைக்கும்போது, பொதுவாக இணைப்பு அல்லது மீண்டும் மீண்டும் தேடல்கள் மூலம் இது நிகழ்கிறது. இந்த வழிமுறை இந்தக் கூட்டு வடிவத்தைக் கண்டறிந்து முடிவுகளில் பிரதிபலிக்கிறது, கூகிள் ஒப்புக்கொள்வதால் அல்ல, ஆனால் இணையம் அப்படிச் சொல்வது போல் தெரிகிறது. டிரம்ப் “முட்டாள்” தேடல் முடிவு காட்டுவது கூகிள் சார்பு அல்ல, ஆனால் இணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
ஆனாலும், இடியட் என்று தேடினால் டிரம்பின் புகைப்படம் கிடைக்கும் விவகாரம் மீண்டும் வைரலானைத் தொடர்ந்து நெட்டிசன்கள் மத்தியில் இது சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஆதரிக்க புதிய தொழில்நுட்பங்கள்
புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஊடகவியலாளர்களுக்கான பல திறன் மேம்பாட்டுத் திட்டங்களை, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் என்று திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு உட்பட நவீன தொழில்நுட்பத்தால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு ஏற்ப ஊடகவியலாளர்களின் திறன்களை வளர்க்க வேண்டியிருப்பதால், அதற்கான பயிற்சி நெறிகள் மற்றும் செயலமர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
நேற்று (27) கண்டி மாவட்ட செயலகத்தில், அரசாங்க தகவல் திணைக்களத்தால் மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்பட்ட அசிதிசி பியவர கண்டி மாவட்ட ஊடக செயலமர்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஜனநாயகம் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்றும், அதற்கு இணையாக, ஊடகவியலாளர்களுக்கான டிஜிட்டல் கருவிகளுக்கான அணுகல், டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவு மற்றும் அந்த தொழில்நுட்பத்தை அணுகுவதற்கான தடைகளை நீக்குதல் ஆகியவை அடுத்த ஆண்டில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களில் நுழையும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், தற்போது செயல்படும் ஊடகவியலாளர்களின் திறன்களை வளர்ப்பதன் மூலம் ஊடகத் துறையில் உள்ள குறைபாடுகளை சமாளிக்க முடியும் என்றும் அவர் கூறினார். ஊடகவியலாளர்களின் திறன்களை வளர்ப்பதற்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் பல பாடநெறிகளை நடத்துவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பாடநெறிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 30வது ஆண்டு நிறைவு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று (27) இலங்கை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் நீண்டகால தலைவருமான கலாபூஷணம் அல்ஹாஜ் என்.எம். அமீன் ஓய்வுபெறுகின்ற நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் இன்றைய வருடாந்திர பொதுக் கூட்டத்தில் புதிய தலைவர் மற்றும் செயலாளர் உற்பட புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
அந்த வகையில் போரத்தின் புதிய தலைவராக எம்.பி.எம். பைரூஸும் அவர்களும் புதிய செயலாளராக ஷம்ஸ் பாஹிமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந் நிகழ்வில் ஊடகத் துறைக்கு நீண்ட காலமாக விலைமதிப்பற்ற சேவையைச் செய்த பத்திரிகையாளர்கள் பாராட்டப்பட்டதுடன், திடீர் பேரழிவுகள் ஏற்பட்டால் பத்திரிகையாளர்களுக்கு உதவுவதற்காக நிதியும் ஒன்றும் நிறுவப்பட்டது.
இலங்கைக்கான சவுதி அரேபியாவின் தூதர் அதிமேதகு காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி, இலங்கைக்கான பாலஸ்தீன தூதர் அதிமேதகு இஹாப் கலீல், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷா பண்டார, முஸ்லிம் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எம்.அமீன், பொதுச் செயலாளர் என்.ஏ.எம்.சாதிக் ஷிஹான், பொருளாளர் கியாஸ் ஏ புஹாரி, தேசிய அமைப்பாளர் இர்ஷாத் ஏ காதர் மற்றும் முஸ்லிம் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பத்திரிகையாளர்கள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.