தவெக ஆட்சி அமைக்க விடுதலை சிறுத்தைகள் ஆதரவை அளித்து இருக்கிறது. விஜய் வென்று ராஜினாமா செய்ய இருக்கும் திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுகிறார். விஜய் அமைச்சரவையில் திருமாவளவன் உள்பட அக்கட்சியை சேர்ந்த 2 பேர் அமைச்சர்கள் ஆகின்றனர்.
தமிழகத்தில் தனி பெரும்பான்மையுடன் அதிக தொகுதிகளை வென்றுள்ள தவெக ஆட்சியமைக்க போதிய எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இல்லை. எனவே மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்டது. 5 எம்எல்ஏக்கள் வைத்துள்ள காங்கிரஸ் முதல் கட்சியாக ஆதரவை அளித்துவிட்டது. இந்திய கம்யூனிஸ்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் தவெகவுக்கு தங்களின் அதிகாரப்பூர்வ ஆதரவை அறிவித்து இருக்கின்றன.
திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் பல கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர், தமது ஆதரவை தவெகவுக்கு வழங்கி உள்ளது. காங்கிரஸ் 5, இடதுசாரிகள் 4, விடுதலை சிறுத்தைகள் 2 என ஆதரவு மூலம் பெரும்பான்மை எண்ணிக்கையான 118ஐ தவெக எட்டி பிடித்துள்ளது.
கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் தவெக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், தாம் வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்கிறார். அந்த தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
போட்டியிட்டு எம்எல்ஏ ஆகும் அவர், கூட்டணி அரசில் அமைச்சராகவும் இடம்பெற உள்ளார். அவருடன் மேலும் ஒரு விசிக எம்எல்ஏவும் அமைச்சராகிறார். தமிழகத்தில் அமைய உள்ள கூட்டணி ஆட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 அமைச்சர்கள் பதவி தரப்படுகின்றன.



