Monday, June 9, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 15

ஐ.பி.எல் போட்டிகள் பாதியில் ரத்து!

0

2025ஆம் ஆண்டு இந்திய ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. 

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை இரு நாடுகளின் கிரிக்கெட் தொடர்களுக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி, மைதானத்திலுள்ள மூன்று ஒளிவிளக்கு கம்பங்களில் ஏற்பட்ட பழுதின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 

இந்திய எல்லைப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. ரசிகர்கள், இரு அணி வீரர்கள் மைதானத்தை விட்டு பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததால், இந்திய எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட இந்தியாவில் உள்ள சில விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து வரும் மே 11ல் தர்மசாலாவில் நடக்கவுள்ள பஞ்சாப், மும்பை அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, ஐபிஎல் தொடரில் 58 போட்டிகள் நிறைவடைந்துள்ளதுடன் 12 ஆரம்ப சுற்றுப் போட்டிகளும், 4 ஃப்ளே ஓப் போட்டிகளும் , இறுதி சுற்று போட்டியும் நடைபெறவுள்ளன. 

இதேவேளை பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகளை இடைநிறுத்தி வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

டில்லி விமான நிலையத்தில் 228 விமானங்கள் ரத்து!

0

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிப்பதால் டில்லி விமான நிலையத்தில், கடந்த 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் மேலும் அதிகரித்தன.

இதன் எதிரொலியாக கடந்த 2 நாட்களில், டில்லி சர்வதேச விமான நிலையத்தில் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மே 10ம் தேதி வரை அமிர்தசரஸ், பதிண்டா, புஜ், பூந்தர், பிகானேர், சண்டிகர், ஹல்வாரா, ஹிராசா (ராஜ்கோட்), ஜம்மு, ஜாம்நகர், ஜெய்சால்மர், ஜோத்பூர், காங்க்ரா-ககல், காண்ட்லா, கேஷோத், கிஷன்கர், லே, லூதியானா உள்ளிட்ட 24 விமான நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா, பிகானீர், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் ராஜ்கோட்டிற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் மே 10ம் தேதி நள்ளிரவு வரை நிறுத்தி வைக்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை வந்த பிரான்ஸ் கடற்படைக் கப்பல்!

0

பிரான்சிய கடற்படைக் கப்பலான ‘BEAUTEMPS BEAUPRE’ இன்று (2025 மே 09) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது,

இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Hydrographic vessel வகைக்கு சொந்தமான ‘BEAUTEMPS BEAUPRE’ என்ற கப்பலானது 80.65 மீற்றர் நீளமும், மொத்தம் 58 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் BERTHEAU Dimitri பணியாற்றுகிறார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ‘BEAUTEMPS BEAUPRE’ கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் குழுவினர்கள், தேசிய நீரியல் வரைபட அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்திய பின்னர், நீரியல் வரைபட சேவை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துறையாடவும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், இந்த கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள் இலங்கையில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளதுடன், உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் 2025 மே 13 ஆம் திகதி அன்று கப்பளானது இலங்கையை விட்டு புறப்படவுள்ளது.

வாழைக்குலை விலையில் பாரிய வீழ்ச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் வீழ்ச்சி வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் பாரிய வீழ்ச்சி காரணமாக செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு கிலோ கதலி வாழைக்காய் 15 ரூபா தொடக்கம் 20 ரூபாவுக்கு கொள்வனவு இடம்பெறுவதால் தமது உற்பத்தி செலவுக்கேற்ப விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் குருவிகளும் குரங்குகளுமே அவற்றை சாப்பிடுவதாகவும் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக வாழைச்செய்கையாளர்கள் தெரிவித்துள்ளதுடன், சந்தையில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்படுகின்ற செலவே விற்பனை செய்கின்ற வாழைக்குலையில் கிடைக்காத நிலையில், வாழைக்குலைகளை மரத்துடன் அப்படியே விட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

வெளிமாவட்ட வியாபாரிகளும் கொள்வனவுக்கு வருவதில்லை என வாழைச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பாப்பரசருக்கு ஜனாதிபதி வாழ்த்து!

0

புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் ரொபர்ட் பிரிவோஸ்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றை வௌியிட்டுள்ளார். 

அதில், “உங்கள் பங்கு பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளதுடன், அதன் ஊடாக உலக மக்களை வழிநடத்த உங்களுக்கு வலிமை கிடைக்க பிரார்த்திக்கின்றேன். உங்கள் தலைமை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கட்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

69 வயதான பாப்பரசர் ரொபர்ட் பிரிவோஸ்ட், அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பாப்பரசராக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். 

அவருக்கு பாப்பரசர் லியோ XIV என பெயரிடப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேச சபைக்கு நாணய சுழற்சியில் ஒருவர்!

0

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இவ்வாறு நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் இரண்டு வேட்பாளர்களும் தலா 320 வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர். 

இதனையடுத்து, இரண்டு வேட்பாளர்களின் சம்மதத்துடன் அங்கு நாணய சுழற்சி இடம்பெற்றது. 

குறித்த நாணய சுழற்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றி பெற்றதுடன், உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இந்த தேர்தலில் வன்னாத்தவில்லு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும், பொதுஜன பெரமுன 4 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click here to join our whatsApp group

புதிய பாப்பரசர் தெரிவு!

0

உலகளவில் 1.4 பில்லியன் கத்தோலிக்க மக்களின் புதிய தலைவர் சற்றுமுன்னர் வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

அதனை அடையாளப்படுத்தும் விதமாக, வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவின் புகைபோக்கியிலிருந்து வெள்ளை புகை வெளியேறியுள்ளது. 

அதன்படி, அடுத்த ஒரு மணி நேரத்தில் புனித பீட்டர் சதுக்கத்தின் மாடியில் புதிய பாப்பரசர் தோன்றுவார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வௌியேறியதால் ​​புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியுள்ள மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சபையிலி ருந்து வௌியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி!

0

பாராளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை சபையில் இருந்து வௌியேற்றுவதற்கு சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

இன்று (8) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, ​​எழுப்பப்பட்ட கேள்வியால் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக அவர் சபையிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளார்.

Click here to join our whatsApp group

வடக்கில் இடம்பெற்ற மிக முக்கிய கூட்டம்!

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்து வினைத்திறனாக செயற்பட வைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

குறிப்பாக கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தை வினைத்திறனாக முன்னெடுப்பது, காணி பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மக்களுடனான கலந்துரையாடல், செயலிழந்து காணப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி புழுதியாறு ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை செயற்படுத்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

எதிர்காலத்தில் கரைச்சி பிரதேச சபையிடம் கையளித்து வினைத்திறனாக முன்னெடுப்பது தொடர்பாகவும் குறித்த விடயத்தை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சமர்ப்பிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் காணி நளாயினி இன்பராஜ் ,வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத்தலைவர் ஆர். உமாகரன், ,பிரதேச செயலாளர், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ,கரைச்சி பிரதேச செயலாளர், வர்த்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வானிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

0

மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த எச்சரிக்கை இன்று (08) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Click here to join our whatsApp group