Sunday, June 14, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 27

பெருமளவான ஆயுதங்களுடன் முன்னாள் எம்.பி அதிரடி கைது!

0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாரச்சி கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து இரண்டு T-56 ரக தோட்டாக்களுக்கான மெகசின்கள், 221 தோட்டாக்கள், ஒரு கைக்குண்டு, 7.2 வகை தோட்டாக்கள் 31, 0.2 வகை தோட்டாக்கள் 103 ஆகியன இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கைக்குண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.

முன்னாள் பாரதளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாரச்சி ஆயுதங்கள் வைத்திருப்பதாக கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவானது, கெஸ்பேவ நீதவானுக்கு தெரிவித்ததை அடுத்து நீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில், பிலியந்தலவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (16) காலை சோதனை நடத்தப்பட்டபோது இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிலியந்தல, மாம்பேவில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பொலிஸார் சோதனை நடத்தியதாகவும், சட்டவிரோதமாக கைவசம் இருந்த ஆயுதங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

சந்தன கத்ரியாரச்சியின் இல்லத்தில் மேலும் சோதனைகளை நடத்தியதில், பதிவு செய்யப்பட்ட 4 துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இரண்டு ஷொட்-கன்களும் இரண்டு 9 மி.மீ. துப்பாக்கிகளுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

குறித்த துப்பாக்கிகளில் ஒன்று சந்தனா கத்ரியாரச்சியின் பெயரிலும், ஏனைய 3 துப்பாக்கிகளும் சந்தனா கத்ரியாரச்சியின் மனைவியின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

அதற்கமைய, சந்தன கத்ரியாரச்சி இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கான காரணத்தைக் கண்டறிய, கொழும்பு குற்றவியல் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் தனியான விசாரணையை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரான நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையின் கீழ், கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

விஜய குமாரதுங்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை மக்கள் கட்சியின் மூலம் அரசியலில் நுழைந்த சந்தன கத்ரியாரச்சி, பின்னர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கெஸ்பேவ தேர்தல் அமைப்பாளராகவும் பிரதி அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி கோர விபத்து!

0

முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து: தம்பதியினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி – முறிகண்டி பகுதியில் இன்று (16) சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து ஒன்று அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள புகையிரதப் பாதையை கார் ஒன்று கடக்க முற்பட்ட வேளையில், அதே திசையில் வந்துகொண்டிருந்த புகையிரதத்துடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது காரில் பயணித்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருமே காயங்களுக்குள்ளாகினர்.

விபத்து இடம்பெற்ற உடனேயே அப்பகுதி மக்கள் மற்றும் அவசர உதவிப் பிரிவினர் இணைந்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அப்பகுதிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்து வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

டெல்லி அடங்கும் வரை அடிக்க வேண்டும்!

0

தொகுதி மறுசீரமைப்பால், சொந்த நாட்டுக்குள்ளேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்படும் ஒரு கொடுமையை அனுமதிக்கலாமா? எனவும், டெல்லி அடங்கும்வரை நாம் அடிக்க வேண்டும்! நாம் அடிக்கும் அடியில் திமிரெடுத்த பா.ஜ.க. அடங்கியே ஆக வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

தருமபுரியில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,” நம்முடைய திராவிட மாடலில், இந்தியாவுக்கே வழிகாட்டும் ரோட்டை நாம் போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தப் பாதையில், முன்னோக்கிப் போகலாம் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் அழைக்கிறோம். இது, பாஜகவுக்குப் பிடிக்கவில்லை!

ஏனென்றால், இந்தியா வளர்ந்துவிட்டால், ஆர்.எஸ்.எஸ். உருவாக்க நினைக்கும் 200 ஆண்டுகாலப் பிற்போக்குச் சமூகத்தை உருவாக்க முடியாது! அந்தச் சமுதாயம் வந்தால்தான், மக்களை மயக்கி, உழைப்பைச் சுரண்டி ஒரு சிலர் மட்டும் வளமாக வாழலாம்.

ஆனால், நம்முடைய திராவிட மாடலில் வளர்ச்சி என்பது, எல்லோருக்குமானது! யாரோ ஒரு சிலர் மட்டும் வளர்ந்தால், அது பிசினஸ்! எல்லோரும் வளர வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று உழைப்பதுதான், திராவிட மாடலின் சக்சஸ்! அதனால்தான், தமிழ்நாடு முழுவதும் பரவலான வளர்ச்சியைக் கொண்டு போகிறோம். தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கிறது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

தொகுதி மறுசீரமைப்பு! அதாவது, இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த நாட்டில் பசியும் – வறுமையும் அதிகமாக இருக்கிறது. இதைச் சரி செய்ய வேண்டும் என்றால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, நம்முடைய தமிழ்நாட்டிலும் – இன்னும் பல மாநிலங்களிலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாகச் செயல்படுத்தினோம். இப்போது என்னவென்றால், உங்கள் மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ற மாதிரி, தொகுதி மறுசீரமைப்புச் செய்யப் போகிறோம், உங்களுக்குக் கூடுதலாக எம்.பி. சீட் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

தமிழ்நாடு அரசியல்

உண்மை என்னவென்றால், இதே காலகட்டத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் சில மாநிலங்களுக்குத்தான், விகிதாச்சாரப்படி அதிக இடம் கிடைக்கப் போகிறது! இதனால், நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல் வலுவிழந்து போய்விடும். நம்முடைய எம்.பி.க்களுக்குப் பவர் இல்லை என்றால், டெல்லி அதிகார வர்க்கம் தமிழ்நாட்டைப் பற்றிச் சிந்திக்குமா? நமக்கு எந்தத் திட்டமாவது கிடைக்குமா? தென்னிந்தியாவிலிருந்து பிரதமர் உருவாக வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவே முடியாது. சொந்த நாட்டுக்குள்ளேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்படும் ஒரு கொடுமையை அனுமதிக்கலாமா?

திமுக கருப்புக்கொடி போராட்டம்

இந்த ஆபத்துதான், தொகுதி மறுசீரமைப்பு! இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றுதான் நாளைக்குத் தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப் போகிறோம். எல்லோரும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, டெல்லியின் ஆணவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தயாராகிவிட்டீர்களா? உங்கள் வீட்டு வாசலில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முழக்கமிடத் தயாரா? தமிழ்நாட்டில் நாம் இந்தப் போராட்டத்தை நாளை நடத்தும்போது டெல்லியில் நம்முடைய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டிருப்பார்கள்!

உரிமைக்குரல் தேர்தல்

வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து எம்.பி.க்களும் தொகுதியில் ஆங்காங்கே இருந்தார்கள். அனைவரும் சென்றுவிட்டார்கள். மணி மட்டும்தான் இருக்கிறார். அவரும் நாளை காலை சென்றுவிடுவார். ஒருவர்கூட இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டேன். தேர்தல் எல்லாம் அதற்குப்பிறகுதான், இதுதான் நமக்கு முக்கியம். இதுதான் நமக்கு சுயமரியாதை. நாளைக்கு நாம் குரல் எழுப்பத் தவறிவிட்டால், நம்முடைய குரலுக்கு எப்பொழுதுமே மதிப்பு இருக்காது! இந்தப் போராட்டத்தில் வெல்லும் வரை நம்முடைய உரிமைக்குரல் அடங்கக் கூடாது!

திமிரெடுத்த பா.ஜ.க

டெல்லி அடங்கும்வரை நாம் அடிக்க வேண்டும்! நாம் அடிக்கும் அடியில் திமிரெடுத்த பா.ஜ.க. அடங்கியே ஆக வேண்டும்! பழனிசாமி அவர்களே… இது தமிழ்நாட்டுக்கான போர்! இதிலாவது கொஞ்சம் சுயமரியாதையோடு நடந்து கொள்ளுங்கள்!அடிமையாகவும், துரோகியாகவும் இருப்பது பழனிசாமிக்கு மட்டும் பழக்கமில்லை; அவரோடு வருகிறவர்களின் இலட்சணத்தையும் பாருங்கள்… துரோகிகளின் மொத்தக் கூடாரமாக உருவாகியிருப்பது N.D.A.” என்றார்.

வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவா? டிரம்ப்பின் இலக்கு!

0

சர்வதேச அரசியல் சூழலில் நிலவும் அசாதாரண நிலையில், பல நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் சிக்கலாக்கி வருகிறது. குறிப்பாக பொருளாதார தடைகள், எரிசக்தி விநியோக கட்டுப்பாடுகள் மற்றும் ஆட்சி மாற்றம் இணைந்து சில புதிய பதற்றங்களை உருவாக்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா மற்றும் கியூபா இடைய மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

அமெரிக்கா வெனிசுலா நாட்டில் தாக்குதல் நடத்தி அந்நாட்டின் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து நாடு கடத்திய பின்பு, டிரம்ப் அடுத்த தாக்குதல் கியூபா மீது தான் பேசினார். ஆனால் அதன் பின்பு டிரம்ப்-ன் முக்கிய இலக்காக ஈரான் மாறியது. இந்த நிலையில் டிரம்ப் மீண்டும் கியூபா மீது கவனத்தை திருப்பியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை பென்டகன், கியூபாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

USA TODAY வெளியிட்ட அறிக்கையின் படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டால் உடனடி தாக்குதலுக்கு தயாராக இருக்கும் வகையில் பல்வேறு சாத்தியமான சூழ்நிலைகளில் எப்படி தாக்குதல்களை மேற்கொள்ள முடியும் என்பது குறித்து ஆய்வுகளை பென்டகன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக, பாதுகாப்புத் துறை வெளியிட்ட விளக்கத்தில் “அனைத்து வகையான அவசர நிலைகளுக்கும் திட்டமிடுவது வழக்கமான செயல்முறை” என்று தெரிவித்துள்ளது. எனினும், கியூபா மீதான ராணுவ நடவடிக்கை திட்டங்கள் குறித்து வெளிப்படையான விபரங்களை கொடுக்கவில்லை. 2026 தொடக்கத்திலிருந்து அமெரிக்கா கியூபாவிற்கு செல்லும் எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்தியதன் மூலம் இருநாடுகளுக்கிடையேயான உறவு மோசமடைந்தது.

மேலும், கியூபாவில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. அதே சமயம், பொருளாதார ஒப்பந்தங்கள் மூலம் பதற்றத்தை குறைக்க முயற்சிகளும் நடைபெறுகின்றன. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகள் எவ்வாறு முடியும் என்பது தெளிவாக இல்லை.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கியூபாவை குறித்து வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தேவையானால் கியூபாவை கைப்பற்றலாம் அல்லது விடுவிக்கலாம் என்ற அவரது கருத்து, அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து சந்தேகங்களை அதிகரித்துள்ளது.

இதற்கு கியூபா அதிபர் மிகல் டியாஸ்-கானெல், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார். நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க போராடுவோம் என்று மிகல் டியாஸ் கூறியது இருநாடுகளுக்கிடையேயான பதற்றம் தீவிரமடைந்துள்ளதைக் காட்டுகிறது.

மேலும், கியூபா ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற அமெரிக்க குற்றச்சாட்டுகளும் ராணுவ தாக்குதலை சிக்கலாக்குகின்றன. அமெரிக்கா-கியூபா உறவில் தற்போது உருவாகியுள்ள இந்த பதற்றம், உலக அரசியல் சமநிலைக்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக தென் அமெரிக்காவில் உருவாகியுள்ள இந்த பதற்றம் மூலம் உலகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாக்கியுள்ளதை காட்டுகிறது.

மழையா? வெயிலா? இலங்கை மக்களை வாட்டி எடுக்கும் வானிலை!

0

இன்றையதினம் (16) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென், வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யக் கூடும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, வவுனியா, குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எச்சரிக்கை
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் மொணராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பக் குறிகாட்டி, அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே தேவையின்றி வெளியில் நடமாடுவதைக் குறைப்தோடு, போதியளவில் நீரை உள்ளெடுத்தல் உள்ளிட்ட போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பகுதிகளில் மழை நிலைமை:
கொழும்பிலிருந்து காலி, அம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பலகோடி பெறுமதியான சிகரெட், மின்னணு பொருட்களுடன் சிக்கிய கும்பல்!

0

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, சட்டவிரோதமாகப் பொருட்களைக் கடத்தி வர முயன்ற 15 சீனப் பிரஜைகள் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்கப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் வர்த்தகர்கள் என அடையாளப்படுத்தியுள்ளதுடன், வெவ்வேறு விமானங்களின் ஊடாக இலங்கையை வந்தடைந்த போதே விமான நிலைய Green Channel பாதையில் வைத்து சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

முதலாவது சம்பவத்தில், 9 சீன வர்த்தகர்கள் தமது உடல், உடைகள் மற்றும் பயணப்பொதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து 383 கையடக்கத் தொலைபேசிகள், 101 டெப்லட்டுகள் (Tabs), 6 வைபை ரவுட்டர்கள், GPS கருவிகளைக் கடத்தி வந்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் பொருட்களின் மொத்தப் பெறுமதி ரூ. 2 கோடி 40 இலட்சத்து 20 ஆயிரம் (ரூ. 24,020,000) என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவை அனைத்தும் சுங்கத் திணைக்களத்தினால் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

அதே தினத்தில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு நடவடிக்கையில், 75,900 சிகரெட்டுகளை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த மேலும் 6 சீன வர்த்தகர்கள் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமது முதுகுப்பைகள் (Backpacks) மற்றும் பயணப்பொதிகளில் இந்த சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்தமை சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்தச் சிகரெட்டுகளின் சந்தைப் பெறுமதி சுமார் ரூ. 1 கோடி 38 இலட்சத்து 50 ஆயிரம் (ரூ. 11,385,000) என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

சிகிச்சைக்கு வந்த இடத்தில் சில்மிஷம்!

0

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தே நபர் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவராவார். 

பெண் வைத்தியர் சந்தேக நபரின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கச் சென்றபோது, அவர் வைத்தியரின் மார்புப் பகுதியைத் தொட்டுள்ளார். 

அந்த நேரத்தில் வைத்தியர் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்போவதாகத் எச்சரித்துள்ளார். 

எனினும், மீண்டும் பரிசோதனை மேற்கொண்டபோது இரண்டாவது முறையும் அந்த வைத்தியருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் குறித்து முறைப்பாடு கிடைத்ததையடுத்து, பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

எனினும், அவருக்குச் சிகிச்சை தேவைப்படுவதால் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையிலேயே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சந்தேக நபர் இன்றைய தினம் (15) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகர் நாலக குணசேகரவின் ஆலோசனையின் பேரில், உப பொலிஸ் பரிசோதகர் வன்னியாரச்சி உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தோல்வி என முத்திரை குத்தும் இஸ்ரேல் மக்கள்!

0

ஈரானுக்கு எதிரான போர் தொடங்கி ஆறு வாரங்களுக்கு மேலாகியும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் தனது ராணுவ பலத்தை ஒரு நிலையான அரசியல் வெற்றியாக மாற்ற முடியவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

தெஹ்ரான் மீது ஒரு தீர்க்கமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டு இந்தப் போர் தொடங்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழல் நெதன்யாகுவிற்கு சாதகமாக இல்லை என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த மோதல் குறித்து இஸ்ரேலில் நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்புகள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. பெரும்பாலான இஸ்ரேலியர்கள் இந்த ஈரானியப் போரை ஒரு ‘தோல்வி’ என்றே பார்க்கின்றனர்.

மேலும் போர்க்களத்தில் இஸ்ரேல் தனது ராணுவ வலிமையைக் காட்டினாலும், அது நெதன்யாகுவின் அரசியல் நிலையை வலுப்படுத்தவோ அல்லது நாட்டுக்குத் தேவையான நீண்டகாலப் பாதுகாப்புத் தீர்வை வழங்கவோ தவறிவிட்டதாக கடுமையாக கண்டித்துள்ளனர்.

போரின் கால நீட்டிப்பு மற்றும் அதன் விளைவுகள் குறித்து இஸ்ரேலிய மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருவது நெதன்யாகுவின் தலைமைத்துவத்திற்குப் பெரும் சவாலாக தற்போது உருவெடுத்துள்ளது.

“தெஹ்ரானை வீழ்த்தி ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்வோம் என்ற நெதன்யாகுவின் வாக்குறுதி, போர்க்கள யதார்த்தத்தில் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.”

ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் பிராந்திய ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இஸ்ரேல் இந்தப் போரைத் தீவிரப்படுத்தியது. ஆனால், ஆறு வாரங்கள் கடந்த நிலையிலும் ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படாதது, சர்வதேச அளவிலும் இஸ்ரேலுக்கு அழுத்தங்களை உருவாக்கி வருகிறது.

ராணுவ ரீதியாக சில இலக்குகளை எட்டியிருந்தாலும், போரை ஒரு முழுமையான வெற்றியாக மாற்றி, அதன் மூலம் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்த நெதன்யாகு போராடி வருகிறார் என்பதே தற்போதைய களநிலவரம்.

விடுமுறை தொடர்பில் வௌியான தகவல்!

0

இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) அனைத்து அரச நிறுவனங்களும், அலுவலகங்களும் வழமைப்போல் திறந்திருக்கும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.​ 

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, அரச ஊழியர்களுக்கு கடந்த திங்கட்கிழமை மற்றும் நேற்று (14) ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று முதல் அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலங்களின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது். 

அதேநேரம் சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு, இன்று (15) முதல் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதன் போக்குவரத்துப் பணிப்பாளர் ஷெரின் அதுகோரள குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, இன்று ஒரு சாதாரண அலுவலக நாள் என்பதால் அலுவலக ரயில்களை வழக்கம் போல் இயக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பயணிகளின் தேவைக்கேற்ப உரிய ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிற்பகலில் மழைக்கு வாய்ப்பு!

0

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. 

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை வவுனியா மாவட்டங்களிலும் மற்றும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வு காரணமாக, நாளை (15) வரையில் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. 

அதற்கிணங்க இன்று நண்பகல் 12.10 அளவில் நாவலடி, பரந்தன், முரசுமோட்டை, வெள்ளிக்கண்டல், உடபத்துக்கண்டல், புளியம்பொக்கணைஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.